துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்...?
செளதியை சேர்ந்த பத்திரிகையாளர் துருக்கியில் காணாமல் போன சம்பவத்தில் விசாரணையை தொடங்கி உள்ளது துருக்கி காவல்துறை.
செளதி பட்டத்து இளவரசர் முகமத் பின் சல்மானை தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த செய்தியாளர் ஜமால் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றப் பின் மாயமானார்.
அவர் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றன. இது தொடர்பான விசாரணையை துருக்கி அரசாங்கம் தொடங்கி உள்ளது.
BBC

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ReplyDeleteதம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர், பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (ஒன்றுபட்டக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.