Header Ads



கோவில் மறைப்பை பிரித்தெறிந்து, முஸ்லிம்கள் அட்டகாசம் செய்யவில்லை - அடியோடு மறுக்கிறார் சந்திரசேகரம்

கல்முனை தமிழ் உப செயலக வளாகத்தில் உள்ள  கோவில் மறைப்பை   பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தவர்கள் எமது ஊர்சனங்கள் தான் என்பதை உறுதிப்படுத்தினார் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.

நேற்றைய தினம்(17) நடைபெற்ற இச்சம்பவம் குறித்து ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இந்துக்கோவிலுக்கு அநியாயம் செய்தார்கள் என முஸ்லீம்களை நாம் சொல்லவில்லை.நேற்றைய வாணி விழாவை சிறப்பிக்கும் முகமாக கோவில் மறைப்பை எங்கள் ஊரவர்களே நீக்கினர்.இதனை முஸ்லீம்கள் செய்யவில்லை.ஆனால்  கல்முனை மாநகர சபை   மேயர் குறித்த  ஆலயத்தை இடிப்பதற்கு  வழக்கு தாக்கல் செய்தமை குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களினால் அழைத்து வரப்பட்ட இளைஞர்கள் தான் இதனை செய்ததாக  நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.