Header Ads



அலரி மாளிகைக்குள் நுழைந்து, ரணிலை வெளியேற்றுவோம் – மகிந்த அணி எச்சரிக்கை


பிரதமர் செயலகத்தை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால், அலரி மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று எச்சரித்துள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

‘சிறிலங்கா அதிபரால் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்ட பின்னர், பிரதமர் பதவியில் இருக்க ரணில் விக்கிரமசிங்கவு்கு எந்த உரிமையும் இல்லை.

ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேற மறுத்தால், நாங்கள் மக்களின் ஆதரவுடன், அலரி மாளிகையில் இருந்து அவரை வெளியேற்றுவோம்.’ என்று தெரிவித்தார்.

அதேவேளை, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் ஏற்கனவே கொழும்பில் ஒன்று கூடியுள்ளனர் என்றும், ரணில் விக்கிரமசிங்க கௌரவமான முறையில் வெளியேறாவிடின், அவர்கள் அலரி மாளிகைக்குள் நுழைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.