Header Ads



சிங்களவர்களுக்கு இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் குறித்தும் உள்ள சந்தேகங்கள் இதோ...!

மக்கொன சைனாபோட் CTJ கிளை  நடத்திய மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி - இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிங்கள மொழியில் 28.10.2018 (நேற்று) பேருவலையில் நடைபெற்றது.

இஸ்லாத்தை பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் மாற்று மத நண்பர்களுக்கு மத்தியில் உள்ள சந்தேகங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கும் இந்த நிகழ்சியில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு தமது சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்ட்டார்கள். 

இஸ்லாம் நவீன அறிவியலை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இறைவன் தான் அனைத்தையும் படைத்தவன் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் நுழையும் போது எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டாம் என்று தனது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது ஏன்?

முஸ்லிம் மாணவிகள் பரீட்சைகள் எழுதும் போதும் முகத்திரை அணிகிறார்களே அது சரியானதா?

*இயேசுவின் இளமை பருவத்தை 
பற்றி புனித குர்ஆன் என்ன சொல்கிறது?*

பைபிளின் புதிய ஏற்பாடு பாவுலின் அபோஸ்தளர் நடபடிகள் எனும் நூலிலிருந்து ஆரம்பிக்கின்றது. இயேசு உட்பட ஏணைய தீர்க்கதிரிசிகளை பற்றி பழைய ஏற்பாட்டிலே கூறப்பட்டுள்ளது. அவற்றை குர் ஆன் ஏற்றுக் கொள்கிறதா?

18 வயதை அடையாத ரிஸானா நபீக்கிற்கு சவுதி அரேபியா மரண தண்டனை வழங்கியது நியாயமா?

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதா?

இலங்கை முஸ்லிம்களில் தீவிரவாத குழுக்கள் உள்ளனவா?

இஸ்லாம் பலதார மணத்தை கட்டாயப்படுத்தியுள்ளதா?

போன்ற இன்னும் பல கேள்விகளை கலந்து கொண்ட சகோதரர்கள் கேட்டு தெளிவு பெற்றார்கள்.

மற்று மத நண்பர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் CTJயின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக் B.Com அவர்கள் பதிலளித்தார்கள். - அல்ஹம்து லில்லாஹ்.

7 comments:

  1. வந்த பித்னாக்களே இன்னும் முடியாத நிலையில் இன்னும் என்னென்னத கின்டி போட போரானுகளோ நாசமாக போனவனுகள்

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ் யாருசரி உங்கள்விளக்கத்துக்கு பின் இஸ்லாத்தைஏற்டாறா?

    ReplyDelete
  3. This extreme group is trying to create unwanted problem.

    ReplyDelete
  4. Dawa for nonmuslims a must... but by learned scholars who respect the Athenticated hadees and sahabaa and imaams in general

    ReplyDelete
  5. கேள்வி ok கேள்விக்கு பதில் என்ன ?

    ReplyDelete
  6. அரை வேக்காடுகள் எல்லாம் பதில் அளிக்க தொடங்கிவிட்டால் நிலமை இன்னும் மோசமாகும்.. பி.ஜே அடிவருடிகள் அதே தொனியில் கொப்பி அடித்து நாகரீகம் தெரியாமல் உள்றிக்கொட்ட போகிறார்கள்.. இந்தியாவின் நிலை அல்ல இலங்கையில் முஸ்லிம்களின் நிலை.. அங்கு சாதி வேறுபாடுகள், ஏற்ற தாழ்வுகள், இட ஒதுக்கீடுகள் என்று வித்தியாசமான கள நிலை, அங்குள்ள நிகழ்ச்சிகளுக்கு ஒப்பாக அதே விதமாக கொப்பி அடிக்கப்பட்ட பதில்கள் இங்கு ஒத்துவராது என்பதற்கு மேல், மேலும் குழப்பங்களையே கொண்டு வரும்.. இவர்களை இப்போதே நிறுத்தாவிட்டால் நிலமை இன்னும் மோசமாகும்..

    ReplyDelete
  7. Can we also know the answers for the questions? So that we can tell others if they have any doubts.

    ReplyDelete

Powered by Blogger.