Header Ads



ரணிலை ஆட்டமிழக்கச் செய்து, மீண்டும் மஹிந்தவை ஆடச்செய்ய முயற்சிக்கின்றார்கள் - பொன்சேகா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி செய்து வரும் பிரச்சாரத்தை, ஆளும் கட்சியின் சில தரப்பினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னும் ஒரு சில தரப்பினர் காபந்து அரசாங்கம் அமைப்பது குறித்து பேசி வருகின்றனர்.

காபந்து அரசாங்கம் அமைப்பதற்கு ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் அதரவளிக்காது என்றே கருதுகின்றேன்.

எவ்வாறெனினும், பிரதமர் ரணிலை ஆட்டமிழக்கச் செய்து மீண்டும் மஹிந்தவை ஆடச் செய்ய சிலர் முயற்சிக்கின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய சுதந்திரத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

சில ஊழல் பேர்வழிகள் இந்த ஓட்டைகளில் புகுந்து தப்பிச் செல்கின்றனர் என அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அது சரி....
    ஆனால்.. அங்கும் இங்கும் மாறி மாறி பாடும் முஸ்லிம் அமைச்சர்கள் (வியாபாரிகள்) தான் இப்போ யார் ஆட்சியை பிடிப்பார்கள்... யார் காலை பிடிப்பது என பெரும் குழப்பத்தில் உள்ளார்களாம்

    ReplyDelete
  2. Yes Ajan You are 100% correct.Rauf hakeem is good business man and good jumper.

    ReplyDelete

Powered by Blogger.