Header Ads



சிறைச்சாலை பஸ் மோதி, 2 பேர் பலி - நால்வர் காயம்

மஹவ, பலகொல்லகம பகுதியில் மஹவ சிறைச்சாலை பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு ​நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (24) காலை 8 மணியளவில் அநுராதபுரத்தில் இருந்து வாரியபொல நோக்கி பயணித்த சிறைச்சாலை பேருந்தும் எதிர்திசையில் பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.