Header Ads



இருதய சத்திர சிகிச்சைக்காக, பண உதவி கோருகிறார்

மடவளை பஸார், கல்வீடு பிரதேசத்தில் படஹல்தெனிய வத்த என்ற இடத்தில் இல- 236-7 என்ற முகவரியில் வசிக்கும் பீ.எம்.எம். இஸ்மி என்பவர் கடுமையாக நோய் வாய்ப்பட்டு சத்திரசிகிட்சைக்காக காத்து நிற்கின்றார். 

இவருக்கு  உடனடியாக இருதய சத்திர சிகிட்சை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என இவரை பரிசோதித்த டாக்டர்களான சுபாசினி ஜயவிக்ரம, மற்றும் முபாரக் ஆகியோர் விதைந்துரை செய்துள்ளனர். 

இவருக்காக சத்திர சிகிட்சையை கொழும்பு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தில் மேற்கொள்ள உள்ளதாக விசேட வைத்தி நிபுணர் ஜி. காந்திஜி தெரிவித்துள்ளார். அதற்கான செலவு 8 இலட்ச ரூபாவும் இதர செலவுகள் சுமார் 2 இலட்சமுமாக மொத்தம் 10 இலட்ச ரூபா தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

பீ.எம்.எம். இஸ்மியின் மனைவியான பாத்திமா மஹ்மூதா தமக்கு 2 வயது முதல் 17 வயதுவரையான 5 பிள்ளைகள் இருப்பதாகவும்;; அதில் கடைசிக் குழந்தை தவிற அனைவரும் பாடசாலை செல்லும் பிள்ளைகன் என்றும் தமக்கு போதியளவு பண வசதி இன்மை காரணமாக இந்த சந்திர சிகிட்சையை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தயாள குனம் படைத்த பெருந்தகைகளிடமிருந்து பண உதவியை எதிர் பார்ப்பதாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வங்கி கணக்கு இலக்கங்கங்கள் பின்வருமாறு அவர் தெரிவித்துள்ளார். 

பெயர்- எப்.எம்.சலாம். 
மடவளை பஸார் இலங்கைக வங்கிக் கிளை. 
கணக்கு இல- 71277899 
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம். 077 6617192 அல்லது 076 6862867 அல்லது 081 2470 883 என்பதாகும். 

இது தொடர்பாக அவரது வேண்டுகோள் கடிதம் மற்றும் வைத்தியர்களது கடிதங்கள் என்பனவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 






No comments

Powered by Blogger.