Header Ads



பொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஊடகவிலாயர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து, மகிந்த ராஜபக்சவிடம் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு - விஜயராமவில் அமைந்துள்ள மகிந்தவின் இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் மகிந்த கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது, தனது தனிப்பட்ட செயலாளர் ஒருவரை நோக்கி “மோடயா” என கூறி திட்டியுள்ளார். இது குறித்து காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. வாசல்ல என்டதால மோடயா வுடன் முடிந்து விட்டது நல்ல வேளை, இதுவே வீட்டிற்குள் நடந்திருந்தால் தனிப்பட்ட செயலாளரின் நிலமை கந்தல் ரா மகனே. கூட இருந்தவர்களும் சேருக்கு ஆதரவாக தர்ம பூசையும் கொடுத்திருப்பார்கள்.

    ReplyDelete
  2. பொது இடத்தில எல்லோரும் முன்னிலையில் அவ்வாறு ஏசியது தவறு.

    ReplyDelete

Powered by Blogger.