Header Ads



செத்த வீட்டில், மைத்திரிக்கு இரகசிய தகவல் வழங்கிய மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நேரில் சந்தித்து உரையாடினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியான சந்திர ராஜபக்சவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற போது இந்த சந்திப்பு இடம்பெற்றது.

மெதமுலனையில் உள்ள மஹிந்த ராஜபக்ச வீட்டிற்கு நேற்று காலை ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட விசேட நீதிமன்றம், அரசியல் முகத்திரையை கொண்டுள்ளதாக கருத்துக்கள் உள்ளதாக மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை நீதிபதி கூறிய கருத்தினால் இந்த விடயம் மேலும் உறுதியாகியுள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சமகால மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் நேற்று காலை உணவும் பரிமாறிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. hope he didnt offer him the Hoppers for breakfast

    ReplyDelete

Powered by Blogger.