Header Ads



நாகவில் பகுதியில், மீராலெப்பை நஜீப் குத்திக் கொலை

புத்தளம் - நாகவில் பிரதேசத்தில், குடும்பஸ்தர் ஒருவர் ௯ரிய ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் - நாகவில்லு பகுதியைச் சேர்ந்த மீரா லெப்பை நஜீப் (வயது 53) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மைத்துனர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே, இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-ரஸீன் ரஸ்மின்-

No comments

Powered by Blogger.