Header Ads



பேருந்துகள் 2 நேருக்குநேர், மோதியதில் 60 பேர் காயம்

குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் மெல்சிறிபுர, கொகரல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 60 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த பேருந்தும் எம்பிலிபிட்டியவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. 

விபத்தில் பலத்த காயமடைந்த 50 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments

Powered by Blogger.