பிறை சர்ச்சையை தீர்ப்பதற்கு, யாரையும் நீக்க வேண்டியதில்லை - ரிஸ்வி முப்தி அதிரடி
பல தசாப்த காலமாக கொழும்பு பெரிய பள்ளிவாசலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் செயற்பட்டு வந்துள்ளது. பிறை விவகாரம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையான சூழலில் எத்தரப்பையும் இதிலிருந்து நீக்காமல் 2006 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள 5 அம்சங்கள் அடங்கிய பிறை தொடர்பான பிரகடனம் மேம்படுத்தப்பட்டு அமுல் நடத்தப்படவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பில் வினவிய போதே உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்; "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கடந்த காலங்களில் பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது அதனைத் தீர்ப்பதற்கு உலமா சபை பிறை தொடர்பான நிலைப்பாட்டினை ஷரீஆ கண்ணோட்டத்தில் ஆராய்ந்து 5 அம்ச பிரகடனம் ஒன்றினை வெளியிட்டது.
இக்கால கட்டத்தில் பிறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உலமா சபையின் பிரகடனத்தில் தேவையான பொருத்தமான சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு தேவையான அம்சங்களைச் சேர்த்து அதனை வலுவாக்கவேண்டும்.
இத்திட்டம் அனைத்து மக்களினதும் உள்ளத்தை வெற்றி கொள்ளும் வகையிலும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அமையவேண்டும்.
உலமா சபையின் பிரகடனம் பின்வருமாறு அமைந்துள்ளது. உள்நாட்டில் வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படுவதை அடிப்படையாகக்கொண்டே இஸ்லாமிய மாதம் தொடர்பான அனைத்து முடிவுகளும் பெறப்படும். தலைப்பிறையை பூமியிலிருந்து வெற்றுக் கண்களால் பார்க்கவேண்டும்.
மேலும் ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதிசெய்யுமிடத்து வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காணமுடியாத நாளாகக் கொள்ளப்படும்.
தலைப்பிறையை தான் கண்டதாக ஒரு முஸ்லிமுடைய அறிவித்தல் விஞ்ஞானத்தின் எதிர்வுகூறலுக்கு முரண்பாடாக அமைந்தால் அவ் அறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆயினும் விஞ்ஞானத்தின் எதிர்வுகூறல் இருந்தபோதும் எவராலும் வெற்றுக் கண்களால் காணப்படவில்லையாயின் அவ்வாறு அது கருதப்பட்டு நடப்பு மாதம் 30 நாட்களாக பூரணப்படுத்தப்படும்.
வானியல் கணிப்பீடுகளை நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்தல்வேண்டும். பிறை பார்த்தல் தொடர்பான சாட்சியம் சொல்வோர் முஸ்லிம்களாகவும் நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது போலவே வானியல் கணிப்பீடுகளை உறுதி செய்யும் வானியல் அறிஞர்களும் முஸ்லிம்களாகவும் நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும்.
பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது அசாத்தியமானது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகத் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படல் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்தின் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கோ, பெருநாள் கொண்டாடுவதற்கோ, பிறரைத் தூண்டவோ பிரகடனப்படுத்தவோ கூடாது.
இலங்கையில் பிறை தொடர்பான தீர்மானம் எடுக்கும் அதிகாரமுடைய சபையாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவால், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்த அமைப்பு உள்ளது. இவ்வமைப்பு பிறையை உறுதிப்படுத்தாத நிலையில் தனிப்பட்ட முறையில் ஒருவரோ அல்லது சிலரோ தாம் பிறை கண்டதாக நம்பினால் அவர்களது நிலைபாடு இமாம்களின் கருத்துப்படி அவர்கள் தனிப்பட்ட முறையில் இரகசியமாக நோன்பு நோற்கலாம். பெருநாளையும் கொண்டாடலாம் என்பதே உலமா சபையின் 2006 ஆம் ஆண்டின் பிரகடனமாகும் என்றார்.
சில விஷயங்கள் காட்டியாக உள்ளது.
ReplyDeleteமீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது... இந்த பிறை குழுவின் முடிவை ஏற்றுக் கொண்டு தலைமைத்துவ கட்டுப்பாடு எனும் பெயரில் மீண்டும் மீண்டும் ஹராமான காரியத்தை செய்ய முடியாது.. நபிகளாரின் காலத்தில் வானியல் அறிஞர்களின் கருத்துக்களை வைத்தா முடிவு செய்தார்கள்? தரிக்கா காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய பள்ளிவாசலின் முடிவை ஏற்றுக் கொண்டு எங்களால் பாவம் செய்ய முடியாது... பிறை குழுவின் முடிவை எதிர்பார்க்க அவர்களின் தேவையை நிறைவு செய்ய முடியாது..
ReplyDeleteதயவு செய்து இந்த நிபந்தனைகளுடன் பிறைபார்தால் பிரச்சினை முடியாது ஆகவே இந்தவிடயத்தில் வந்துள்ள நபிமொழிகளை காலத்தின் மாற்றத்திற்கேட்ப அதன் (பிக்ஹ்) விளக்கத்தை விளங்க முயற்சிக்கவும் தற்போது மக்களின் கைகளில் இருக்கும் தொலைதொடர்பு தொழிநுட்பத்தின் அகாரசத்தியை கவனத்தில் கொண்டு இதில் உள்ள சில நிபந்தனைகள மறுஆய்வு செய்து அவைகளை திருத்திகொண்டால் மீண்டும் இந்த பிரச்சினை நம் இலங்கை மக்களிடையே நிகழாதிருக்கலாம்
ReplyDeleteNaked eye only
ReplyDeleteThe words of rasool is wisdom.
If you use modern technology;
You can see the Sands of the moon from the earth.
Don't think we are right!
Our rasool is correct!
First we all accept the five principles
That all jamaath accepted.
Majority of Muslims don't worry about
This!they understood who were the trouble creators!
வானிலை ஆராய்ச்சி மையத்தின் பிறை அறிக்கையை தாராளமாக ஏற்றுக் கொள் கொள்ள முடியும்
ReplyDeleteஇதில் இஸ்லாத்தில் தடையில்லை
பிறை கண்டதற்கு இஸ்லாம் கூறும் சாட்சிகள் அதை கொண்டு தகவலை உறுதி செய்வதற்க்கே
அதற்கான தகவலை வானிலை ஆராய்ச்சி மையம் நவீன முறையில் ஆதாரபூர்வமாக கொடுக்கும் பட்ச்சத்தில் அது ஆயிரம் பேர் கொண்ட சாட்சிகளுக்கு சமமாகும்
இஸ்லாம் யுக முடிவு நாட்களை தொடர்ந்து வரும் அறிவியலை போதிக்கும் மார்க்கமாகும் அது முன்னோர்களின் மூடத்தனங்களை கொண்டதல்ல...
நாட்டின் பல பகுதிகளில் பிறை கண்டும், வானியல் அவதான நிலையம் 14.06.2018 அன்று refer(https://www.moongiant.com/phase/6/14/2018) வெற்றுக்கண்ணுக்கு பிறை தெரிய வாய்ப்பிருக்கின்றது என கூறியும், 15.06.2018 அன்று இரண்டாவது பிறைதான் தென்பட்டது என்று தெரிந்தும், உங்கள் பிரகடனத்துக்கு அமைவாக அமைந்தும்.
ReplyDelete1) ஏன் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது விடவில்லையா?
2) ஏற்றுக்கொள்ளாததால் எதனை சாதித்தீர்கள்?
3) இயக்க வெறியா?
4) பெரிய பள்ளியின் கைபொம்மையா?
5) நீங்கள் கூறும் முஸ்லீம் வானியல் வல்லுனர்களிடம் நவீன தொழில்நுட்ப கருவிகள் இருக்கின்றனவா அல்லது இருந்தும் பயன்படுத்த தெரியாதா?
N.B: மறுமை நாள் நெருங்கும்போது தகுதியற்றவர்கள் தலைமைத்துவம் ஏற்பார்கள்(அமானிதம் பாதுகாக்கப்படமாட்டாது)
மீண்டுமா?
ReplyDeleteஇப் பிரச்சினை முடியவே முடியாது.
நிறையவே தீர்வுகள் சொல்லப்பட்ட பின்பும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்றால், இனி வரும் சகல பிரச்சினைகளுக்கும் உலமா சபை பொறுப்பேற்க வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.கண்ணியத்துக்கும் கௌரவத்துக்கும் உரிய எங்கள் முப்தி அவர்களே நீங்கள் எல்லாம் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டு நான்கு எழுத்து படித்த எங்கள் மேதாவிகளுக்கு அந்த இடத்தை கொடுத்து விடுங்கள் .உங்களை விட இனிமேல் அவர்கள் உங்களுக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் எல்லாவற்றையும் வினைத்திறனோடு சொல்லியும் செய்தும் காட்டுவார்கள்
ReplyDeleteபிறை குழு ஒவ்வோரு மாவட்டத்திலும் இருக்க வேண்டும்.
ReplyDelete@ NAZMI : உலகில் எங்கோ தெரியும் பிறையை இங்கு தெரிவதாய் கற்பனை செய்து கொண்டுள்ளீர். உண்மையில் நம் நாட்டு வானியல் திணைக்கள உத்தியோகபூர்வ அறிக்கையின் படி 14ம திகதி பிறை தென்படுவதற்கான சாத்தியக்கூறு 0.4% என்பதாகும். பார்க்க: https://www.timeanddate.com/moon/sri-lanka/colombo.
ReplyDeleteபிறை 7 பாகையில் 6:30 க்கும், 6 பாகையில் 6:34 க்கும் 5 பாகையில் 6:42 க்கும் 4 பாகையில் 6:46 க்கும் 3 பாகையில் 6:49 க்கும் 2 பாகையில் 6:55 க்கும் இருந்தது என்பதே உண்மை நிலை.
ஆயின் பிறை கண்டோம் என்று கூறியவர்களிடம் நிகழ்வை உறுதிப்படுத்த விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது
மேலும் முடிந்து போன சம்பவங்களை மீளவும் கிளறுவதால் என்ன பயன் ? தயவுசெய்து செய்து விட்டுவிடுங்களேன்.