Header Ads



விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டார் - சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார்.

இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் அண்மை காலமாக வலுவடைந்துள்ளது.

வடமாகாண சபையின் பதவி காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற போட்டியெழுந்துள்ளது.

எனினும், தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், முதலமைச்சருக்கு எதிராக அண்மை காலமாக கருத்துக்களை வெளியிட்டு வரும் சுமந்திரன் மீண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



8 comments:

  1. ஒவ்வருவர்களுக்கும் சொந்த கருத்துகள் உள்ளன.

    ReplyDelete
  2. முதலில் நீ பொத்திட்டு மாறு. உனக்கு இருக்கு அடித்த தேர்தலில் செம்மறி.

    ReplyDelete
  3. தவறான தெரிவு கொழும்பில் இருந்து கொண்டு போகும்போதே சுட்டிக்காட்டினோம் ..

    ReplyDelete
  4. விக்கினேஸ்வரன் மட்டுமல்ல நீயும்தான் சுமந்திரன் இராமாயணத்துக்கு ஒரு குந்தி மகாபார்த்தத்திற்கு ஒரு சகுனி அதேபோல் கூட்டமைப்புக்கு நீ.

    ReplyDelete
  5. @saleem Mohideen
    சுமந்திரனும் கொழும்பின் மைந்தன் தான். நீங்கள் இங்கே பிரதேச வாசத்தை கிளப்பிவிடாதீர்கள். கொழும்பில் இருந்து வந்தவருக்கு தான் முஸ்லிம்களின் அட்டுழியங்கள் மற்றும் பிற இனத்தவர்களின் குரோதங்கள் எல்லாம் தெரியும். வடகிழக்கை சேர்ந்தவர்கள் வெறும் வெளியுலகம் தெரியாத கிணத்து தவளைகள் போல தான் அரசியல் செய்வார்கள். எனவே எங்களுக்கு மற்ற இரு இனங்களின் உண்மையான உள்ளங்களை தெரிந்து கொண்ட தெட்கு தமிழர் தான் வேண்டும்

    ReplyDelete
  6. எல்லோரும் புலிச் சாயம் பூசினர் தீவிரவாதிகள்தான்

    ReplyDelete
  7. எல்லோரும் புலிச் சாயம் பூசினர் தீவிரவாதிகள்தான்

    ReplyDelete

Powered by Blogger.