6 மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, ஊவா, மத்திய, கிழக்கு, மேற்கு வட மத்திய, வட மேற்கு மற்றும தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் 3 மணிமுதல் அடுத்து வரும் 8 மணித்தியாலங்களுக்கு இடியுடன்கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், மணித்தியாலத்துக்கு சுமார் 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் குறிப்பாக சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Post a Comment