இன்றுதொடக்கம் 27 ஆம் திகதிவரையான, காலத்தை நன்கு பயன்படுத்துங்கள்
மே மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சட்ட வாரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு சட்டத்தினால் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான உதய ரொஹான் டி சில்வா தெரிவிக்கும்போது,
நீதிமன்றம் அல்லது நீதிபதிகளினால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் அது தொடர்பாக முறைப்பாடு செய்வதற்குப் பின்வாங்காமல் இந்த சட்டவாரத்தை இதன் ஆரம்பமாகக் கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.
மேலும், தொழிலின் கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் சேவையைப் பெற்றுக் கொள்வதற்குத் தீங்கு ஏற்படும் வகையிலும் செயற்படும் நீதிபதிகளுக்கு எதிராக நடடிவக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றங்களில் இடம்பெறும் அநீதி தொடர்பாக, சட்டவாரத்தில் தெளிவுபடுத்துவதற்காக, 0777235363, 0113133864, 0113133872 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
Post a Comment