Header Ads



"அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவே நாங்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்தோம்"

அரசாங்கத்தின முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் தம்முடன் வந்து இணைந்துகொள்வார்கள் என, பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பு - டார்லி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், தாம் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவது இல்லையெனத் தெரிவித்தார்.

"நாங்கள் 8ஆம் திகதி எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம். அந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை. லண்டனில் ஜனாதிபதியுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்போது சாதகமான பதில்கள் கிடைத்தன. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கே நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்தோம்" என முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.