Header Ads



நாயிடம் பால், குடிக்கும் பூனை . முல்லைத்தீவில் விசித்திரம் (வீடியோ)


முல்லைத்தீவு நகரில் குட்டிகளை ஈன்றுள்ள நாய் ஒன்றிடம் தினமும் பூனையொன்று பால் குடித்து வரும் விசித்திர சம்பவம் இடம்பெற்று வருவதாக நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாய் குட்டிகளுக்கு பாலுட்டிய பின்னர், அருகில் இருக்கும் பூனைக்கும் பால் கொடுப்பதாகவும் முல்லைத்தீவு நகர மக்கள் கூறுகின்றனர்.

நாய் குட்டிகளை ஈன்ற பின்னர், அருகில் இருக்கும் பூனை நாய் நட்பாக இருந்து வருவதாகவும், பூனை, நாய் குட்டிகளுக்கு எந்த தொந்தரவையும் கொடுப்பதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மனிதர்களுக்கு இடையில், மனிதாபிமானம், அன்பு, பாசம் என்பன குறைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் எதிரான குணங்களை கொண்ட உயிரினங்கள் ஒற்றுமையாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

No comments

Powered by Blogger.