"யானையின் தலை மாற வேண்டுமென்ற, நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது"
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என, கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் நிலைப்பாடொன்று ஏற்பட்டுள்ளதென, அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மாநாயக்க தேரரை, நேற்று (20) சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சியினரின் இந்த நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து, எதிர்காலத்தில் இந்த மாற்றம் ஏற்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, கட்சிக்குள் பிரச்சினையொன்று ஏற்படும்போது, அதை, பேச்சுவார்த்தை மூலம் மாத்திரமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.
யானையின் தலை மாறாது ஆனால் வால் தான் இனிமேல் மாறும்!
ReplyDeleteசிங்கம், புலி, யானை என மிருக ஆட்சிதான் இந்த நாடு இதுவரை கண்டது. காரணம் நமது தேசியக் கொடியிலேயே வாளேந்திய சிங்கம்.
ReplyDeleteசிங்கத்திடமுள்ள வாளை சிங்கத்தைப் படைத்தவனின் போதனைக்கேற்ற நீதியான ஆட்சிக்கு எப்போது எடுத்துச் செல்லுவோமோ, அப்போதே தொடங்கும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு மத்தியில் சாந்தி - அமைதி!
தலையையும் வாலையும் விட மாற்றவேண்டியது தலைவிதியையே!