துமிந்தவும், மஹிந்தவும் பதவி விலகத் தேவையில்லை - சந்திரிக்கா
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் பொதுச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எந்தவித தேவையும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
அத்தனகல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த அரசாங்கத்துக்குள் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த, தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு, தற்பொழுது இராஜினாமா செய்துள்ள 16 உறுப்பினர்களிலுள்ளவர்களே இவ்வாறு செயலாளர்களை நீக்குமாறு கருத்துத் தெரிவித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment