முஸ்லிம்கள் பற்றி, சிங்களவர்களிடம் விதைக்கப்பட்டும் அச்சங்கள்
-ரவூப் ஸெய்ன்-
1915 இல் இடம்பெற்ற கம்பளைக் கலவரத்துக்கான அடித்தளத்தை இட்டவர் சிங்கள மஹா போதி சபையை ஸ்தாபித்த அநகாரிக தர்மபால. கலவரத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதற்கான பிரசாரங்களை அவர் வெற்றிகரமாக முன்னெடுத்தார். இதற்கெனவே அவரது மது ஒழிப்பு இயக்கம் பயன்படுத்தப்பட்டது. தர்மபாலவின் பிரச்சாரம் இரண்டு பகுதிகளில் முனைப்புப் பெற்றிருந்தது. ஒன்று, ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியத் தமிழர்களுக்கு எதிரானது. இரண்டாவது, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரானது.
“சிங்கள இனம் ஓர் இணையற்ற இனம். அவர்களது உடலில் அடிமை இரத்தம் ஓடவில்லை. அவ்வினத்தை அழிவுக் காரர்களாலோ பிற மதத்தவர்களான தமிழர்களாலோ அடிமையாக்க முடியவில்லை. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்நாட்டை அழித்து பௌத்த ஆலயங்களை நாசம் செய்து நூலகங்களைத் தீக்கிரையாக்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எம்மினத்தைப் பூண்டோடு ஒழிக்க முயல்பவர்கள் ஐரோப்பியர்கள். மாமிசத்தைப் புசிக்க வேண்டுமென சபிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தாழ்ந்தவர்கள். சிங்களவர்கள்தான் சிங்கள நாட்டை ஆள வேண்டும்.” (பார்க்க. தர்மபால லிபி) எனக் குரலெழுப்பிய தர்மபால மறுபுறம் முஸ்லிம்களையும் முனைப்பாக இலக்கு வைத்தார்.
“அந்நியரான முஹம்மதியர் ஷைலொக்கிய வழிமுறைகளால் யூதர்களைப் போன்று செல்வந்தர்களாக மாறினர். 2358 வருடங்களாக அந்நிய முற்றுகையிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக இரத்தத்தை ஆறு போல் ஓட்டி தமது மூதாதையர்களை இழந்த மண்ணின் மைந்தர்களான சிங்களவர்கள் பிரித்தானியர்களின் கண்களில் நாடோடிகளாகவே தென்படுகின்றனர். தென்னிந்திய முஹம்மதியர்கள் இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் எந்த அனுபவமும் அற்ற கிராமவாசிகளைச் சுரண்டுகின்றார்கள். இதன் விளைவு முஹம்மதியர் முன்னேறுகின்றார்கள். மண்ணின் மைந்தர்கள் பின்னடைகிறார்கள்.” (பார்க்க. தர்மபால லிபி)
இத்தகைய பிரச்சாரங்களால் வெறியூட்டப்பட்டிருந்த சிங்கள இளைஞர்கள் 1915 கலவரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான தமது பகையுணர்வைக் கொட்டித் தீர்த்தனர். கலவரத்துக்கான உடனடிக் காரணம் வேறு இருப்பினும் அதற்கான சித்தாந்த அடித்தளத்தை இத்தகைய இனத் தேசியவாதிகளின் பிரசாரங்களே ஏற்படுத்தியிருந்தன. அக்காலத்தில் சுதேச வர்த்தகத்திலும் சர்வதேச வணிகத்திலும் முஸ்லிம்கள் பெற்றிருந்த செல்வாக்கைத் தகர்ப்பதற்கு இத்தகைய இனக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன.
தற்போதைய குறிப்பாக 2012 இற்குப் பின்னர் ஏற்பட்ட இனப்பதட்டத்திற்கு ஒற்றைக் காரணத்தைத் தேட முடியாது. கடந்த ஆறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் பல்வேறு வகையான அச்சங்களும் ஐயங்களும் விதைக்கப்பட்டு வருகின்றன. அவை வெறும் கற்பிதங்கள் என்பதோடு திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அச்சங்களை சிங்கள சிவில் சமூகத்திற்கு அவை வெறும் கற்பிதங்கள் என்பதனை விளக்குவதற்கு முஸ்லிம்கள் முன்வரவில்லை. இது துரதிஷ்டமானது. முஸ்லிம் தலைமைகளின் பலவீனமே இதற்கான காரணமாகும். மறுபுறம் முஸ்லிம்கள் குறித்து இனவாதிகள் பரப்பும் போலிக் குற்றச்சாட்டுக்களையும் அச்சங்களையும் சிங்கள மக்கள் நம்புவதற்கு ஏற்ற சூழல் மாறிவரும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளதா என்பதும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய விடயமாகின்றது.
முதலில் நாம் முஸ்லிம்களுக்கெதிராக சிங்களவர்களின் உணர்வலைகளை எழுப்ப முயலும் இனவாதிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் போலிக்குற்றச் சாட்டுக்கள் எவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஒரு பரிமாற்று வசதிக்காக பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
1.நாட்டில் முஸ்லிம் சனத்தொகை அதிகரித்து வருகின்றது. இதனால் 2100 ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை நாடாக மாறிவிடும்.
2.சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களுக்கு பெருந்தொகையான பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. அவை மிக ஆடம்பரமாகவும் பெரும் செலவிலும் உருவாக்கப்படுகின்றன.
3.முஸ்லிம்கள் இனவாதம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கின்றனர்.
4.ஒப்பீட்டு ரீதியில் இலங்கை முஸ்லிம்கள் நாட்டுப்பற்று அற்றவர்களாகவும் சுயநலமிகளாகவும் வாழ்கின்றனர்.
5.பௌத்த கலாசார சின்னங்களையும் தொல்பொருள் சான்றுகளையும் அழித்து வருகின்றனர்.
6.சிங்களவர்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் சூழ்ச்சி செய்கின்றனர்.
7.ஹலால் சான்றிதழ் மூலம் சிங்கள பௌத்தர்களின் பணத்தைச் சுரண்டுகின்றனர்.
8.பாரம்பரிய இஸ்லாத்திலிருந்து விலகி தீவிர வாத வஹ்ஹாபிய இஸ்லாத்திற்கு மாறுகின்றனர். இது ஓர் அடிப்படைவாதமாகும்.
9.திட்டமிட்ட வகையில் சிங்களவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகின்றனர்.
10.பள்ளிவாசல்கள் மற்றும் அறபு மத்ரஸாக்களில் தீவிரவாதத்தைப் போதிக்கின்றனர்.
11.நாட்டின் வர்த்தகத்தில் முஸ்லிம்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை 1990 களிலிருந்து தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இவற்றை முன்னெடுக்கும் இனவாத இயக்கங்களின் பெயர்களும் முகங்களும் மாறிவந்துள்ள போதும் பிரசாரத்தின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபுடன் தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்ட கங்கொடவில சோம தேரர் தான் முதல் குற்றச்சாட்டைக் காட்டமாக முன்வைத்தவர். அவர் 2050 ஆம் ஆண்டிற்குள் இலங்கை பெரும்பான்மை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என்று விஷப்பிரசாரம் செய்து வந்தார். இதனை அறிவு பூர்வமாகவும் புள்ளிவிபர ரீதியிலும் பின்னர் நோக்குவோம்.
கங்கொடவில எனும் தனிப்பட்ட மதகுரு ஒருவரோடு பரவலாக்கப்பட்ட விஷப் பிரசாரம் பின்னர் பல்வேறு சிங்கள, பௌத்த அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது. 1990 களில் 40 சிங்கள பௌத்த இயக்கங்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கிய சிங்கள ஆணைக்குழு இதேவகைப் பிரசாரத்தை முன்னெடுத்தது. 1997 இல் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு முன்பாக பேராதெனிய, கொழும்பு, களனி, ஜயவர்தனபுர போன்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சிங்களக் கல்விமான்களும் பௌத்த பிக்குகளும் கூட முஸ்லிம்களுக்கெதிராகச் சாட்சியமளித்தனர்.
“சிங்கள பூமி புத்ரய” கட்சி இதன் அரசியல் பரிமாணமாக செயற்படத் தொடங்கியது. அதன் தலைவர் ஹரிச்சந்திர விஜயதுங்க “இலங்கையின் பெரும்பாலான வர்த்தகம் முஸ்லிம்களிடமே உள்ளது. இலங்கையில் இஸ்லாமிய அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த அகதிகள் திஹாரியில் காணிகளை வாங்கியுள்ளனர். புத்தளத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் அதிகரித்து வருகின்றது. அக்குறணை நகரினூடாக சிங்களவர்களின் பூதவுடல்களைக் கொண்டுசெல்வது கூட அனுமதிக்கப்படுவதில்லை. கிரிந்திவலை, நிட்டம்புவ நகரங்களில் முஸ்லிம்களின் கடைகள் அதிகரித்து வருகின்றன. 1976 இல் மீரிகமை நகரில் ஒரேயொரு முஸ்லிம் கடையே இருந்தது. தற்போது 56 கடைகள் இருக்கின்றன.” எனத் தெரிவித்திருந்தார். (திவயின 07.04.1997)
சிங்கள ஆணைக்குழுவின் முதலாவது சுற்றறிக்கை 1997 செப்டம்பர் 17 இல் வெளியிடப்பட்டது. கடந்த 30 ஆண்டுகால இனவாத வரலாற்றில் இவ்வாணைக்குழு ஒரு முக்கிய நிறுவனமாகும். சிங்கள சமூகத்திலுள்ள எல்லாத் தரப்பினரையும் இணைத்த ஒரு வலைப்பின்னலை அது ஏற்படுத்தியது. சிங்கள ஆணைக்குழுவைத் தொடர்ந்து ‘சிங்கள வீரவிதான’ இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் இன்னொரு கிளை இயக்கமாக பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறங்கியது.
2000 களில் இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு அரசியல் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கிட்டிய எதிர்காலத்தில் அவை அரசியல் கட்சிகளாக மாறி ஆட்சியில் பங்காளர்களாக தம்மைத் தகவமைத்துக் கொண்டன. அதில் ஜாதிக ஹெல உறுமய முக்கியமான இயக்கமாகும். இதன் சித்தாந்த அடிப்படைவாதியாக இருப்பவர் இன்றைய அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வியக்கத்தின் முக்கிய மதகுருவான ஓமல்பே சோபிக தேரர் கடந்த வாரமும் முஸ்லிம்களுக்கு அதிக சலுகை வழங்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.
2013 இல் தலையெடுத்த ‘பொதுபல சேனா’ இன்றைய இனப்பதட்டத்தின் அடிநாதமாக உள்ளது.
இதன் மடியில் வளர்ந்த சிங்கள இயக்கங்களான சிங்கள ராவய, ஹெல சிங்கள ஹிரு, ராவண பலய, சிங்க லே, மஹ சொஹொன் பலகாய போன்றன முஸ்லிம் சிறுபான்மையை இலக்குவைத்துச் செயல்படுகின்றன. வெளிப்படையாகப் பெயர்களில் இவை வேறுபட்டாலும் சித்தாந்த உள்ளடக்கத்திலும் முஸ்லிம் விரோதப் பிரசாரத்திலும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. இவை சிங்களவர்களுக்கு மத்தியில் மேற்கொண்டுவரும் விஷப்பிரசாரம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்த போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முஸ்லிம் தலைமைகளும், சமூக நிறுவனங்களும் சிங்கள சிவில் சமூகத்திற்கு விளக்கமளிக்க முன்வர வேண்டும். இத்தகைய இனவாதிகளுடன் இவை தொடர்பில் விவாதம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு முஸ்லிம்கள் குறித்து நிலவும் ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
நாட்டில் முஸ்லிம் சனத்தொகை அதிகரித்து வருகின்றது. இதனால் 2100 ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை நாடாக மாறிவிடும். இது சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய அச்சத்தை விதைத்து வரும் இனவாத சக்திகளின் விஷப் பிரசாரங்களில் முதன்மையானது. ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போன்று இந்தப் போலிக் குற்றச்சாட்டை முதலில் பிரச்சாரம் செய்தவர் கங்கொடவில சோம தேரர். பின்வந்த சில பௌத்த பிக்குகளும் இனத்தேசியவாத இயக்கங்களும் இப்பிரசாரத்தை முன்னெடுத்து வந்தனர்.
விளைவாக முஸ்லிம் பெண்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்படுவதற்கு அச்சம் தெரிவித்து வந்தனர்.இயற்கையான சுகப்பிரசவங்களைக் கூடத் திட்டமிட்டு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு முஸ்லிம்களின் மகப்பேற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இத்தகைய இயக்கங்களில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற இந்நடவடிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. எனினும், சில இடங்களில் இன்னும் தொடர்வதாக முஸ்லிம்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முஸ்லிம்கள் குறித்துப் பரப்பப்படும் இப்போலிக் குற்றச்சாட்டு மற்றும் அச்சம் எந்தளவு அறிவுபூர்வமானது என்பதை புள்ளிவிபர ரீதியாகப் பரிசீலிப்பது கட்டாயமாகும். ஏனெனில், சமீபகாலங்களில் கூட திவயின, ஐலன்ட், அத போன்ற பத்திரிகைகள் இதே கருத்தைப் பெரும் கட்டுரைகளாக வெளியிட்டன. எனவே, இது குறித்து அரசாங்கத்தின் தொகைமதிப்பீட்டுப் புள்ளிவிபரங்களை ஆராய்வது முக்கியமானது.
Points 3, 4 & 11 are true
ReplyDeleteஎமது அரசியல்த் தலைமைகளும் சிவில் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இதில் போலியாகக் காணப்படும் விடயங்களை சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்த முன்வருவதோடு மேற்சொன்ன குற்றச் சாட்டுக்களில் நாமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ள குற்றச் சாட்டுக்களான அதிகளவான பள்ளிகள்,நாட்டுப் பற்றின்மை,பாரம்பரிய இஸ்லாத்தில் இருந்து மாறி வஹாபிசத்தைப் பின்பற்றுதல்,இனவாத அரசியல் போன்ற வற்றிலிருந்தும் மாற்றம் பெற செயலாற்ற வேண்டும்.
ReplyDeleteநல்லிணக்கத்தை உருவாக்க உதவக்கூடிய சிறந்த ஆக்கம்.
ReplyDeleteஇக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தொடுக்கப்பட்டதாகக் கருதி இவற்றுக்கான நமது சார்பு நிலைகளை நமக்கு சந்தர்ப்பம் வாய்க்கும் போது மென்மையாக தெளிவுபடுத்துவதோடு தப்பபிப்பிராயங்களைக் களைய வேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிமும் பிறரது அச்சத்தைத் தவிர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதோடு அதேநேரம் இஸ்லாத்தின் விளம்பரமாகவும் மாற வேண்டும்.
இந்நாட்டில் சிலர், பெரும் சலுகைகளை அனுபவிக்கிறார்கள் என்றால், அச்சலுகைகள் மற்றும் இயற்கையோடு இயைந்த அவ்வாழ்வு முறை முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல.
பெளத்தம் ஒரு தத்துவார்த்தம் என்பதற்கப்பால், அவர்களுக்கு வெற்றிடமாக உள்ள முழுமையான வாழ்க்கை நெறி இஸ்லாத்தில் உள்ளதையும், அது எளிமையானதும் மனிதர்கள் அனைவரதும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடியது என்ற வகையில் அவர்களுக்கும் சொந்தமானது என்பதையும் விவேகத்தோடும் அனுதாபத்தோடும் விளங்கவைக்க வேண்டும்.
@ Ajan Antonyraj: Point # 4:
முஸ்லிம்கள் நாட்டுப் பற்றாளர்களாக மாற நாடு சொல்வதை அவர்களது மொழியில் சொன்னால்தானே புரியும்.
தெற்கிலும் தமிழ் மொழி அமுலாக்கம் வேண்டும் என்கின்றேன்.
@Lareef Abdul Majeed:
பாரம்பரியமாக பின்பற்றிவந்த இஸ்லாம் முழுமையானதல்ல. இப்போது முஸ்லிம்கள் இஸ்லாத்தின் 'அடிப்படை'களைக் கற்க ஆரம்பித்து அவ்வாறு நடப்பது வஹ்ஹாபிசமும் அல்ல. அதனை அடிப்படைவாதம் என்று கெளரவமாகச் சொல்லலாம்.
அரசாங்கத்தில் பொதுவாதம் நீதியாக நிலைநாட்டப்படாதபோது இனவாதம் தானாகப் பிறக்கும்.
@Fassy,
ReplyDeleteYou are 100% true
Thanks Anush!
ReplyDelete