Header Ads



தேவைப்பட்டால் அரசியலில் நுழைவது, பற்றி முடிவு செய்வேன் - கோத்தா

தேவைப்பட்டால் அரசியலில் நுழைவது பற்றி முடிவு செய்வேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச அரசியலில் நுழையவுள்ளதாக பரவும் செய்திகள் தொடர்பாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு-

கேள்வி –  அரசியலில் நுழைவதற்குத் திட்டமிட்டுள்ளீர்களா?,

பதில்  – நான் அதற்குத் திட்டமிடவில்லை. தேவைப்பட்டால் முடிவு செய்வேன்.

கேள்வி – அதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்று தெரிகிறது…

பதில் – சாத்தியமான எல்லா வழிகளிலும் நாட்டுக்குச் சேவையாற்றுவதற்கே நான் விரும்புகிறேன். அரசியலில் இறங்கினால் முதலாவது அல்லது இரண்டாவது, அல்லது மூன்றாவது என்பது பிரச்சினையே அல்ல. என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும்.

1 comment:

  1. We Sri Lankans do not want American rule this country. We under any circumstances support such move from any individual or group or party who are affiliated to USA.

    ReplyDelete

Powered by Blogger.