துமிந்தவை விரட்டியடித்தாரா மைத்திரிபால..?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தான் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமையவே எதிர்த்ததாகவும் அதிகாரத்திற்காக கொள்கையை காட்டிக்கொடுக்க போவதில்லை எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் கொள்கைகளில் இதுவரை எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதால், ஆடை அணிந்து கொண்டு மகிந்த ராஜபக்சவுடன் இணைந்திருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலும் இணையப் போவதில்லை.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை ஜனாதிபதி மாளிகையில் இருந்து விரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அதில் எந்த உண்மையும் இல்லை எனவும் கடந்த இரண்டு தினங்களாக தான் வீட்டிலேயே இருந்தாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.
Post a Comment