Header Ads



இரவில் இரகசிய, சந்திப்புகளில் ஜனாதிபதி - நக்கலடிக்கும் நாமல்


நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஐ.தே.க.வே நாசப்­ப­டுத்­தி­ய­தாக ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன கூறினார். எனினும் அப்­ப­டிப்­பட்ட ஐ.தே.க.வுடன் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்­கவே ஜனா­தி­பதி முயற்­சிக்­கின்றார். அத­னா­லேயே அவர் இர­வு­களில் இர­க­சி­ய­மாக அவர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­கின்றார்.  பிர­த­மரை கூட தீர்­ம­ானித்­துக்­கொள்ள முடி­யாத சூழலில் தான் பொதுமக்­களை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்­தாது உடன் பொதுத்தேர்­த­லுக்கு செல்ல வேண்டும் என நாம் கோரு­கின்றோம். என அம்­பாந்­தோட்டை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

 கொழும்பு மேல் நீதி­மன்றில்  விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்பட்ட அவர் உள்­ளிட்ட அறு­வ­ருக்கு எதி­ராக தொடரப்­பட்­டுள்ள கறுப்புப் பணம் சுத்திகரிப்பு சட்­டத்தின் கீழான வழக்கு விசா­ர­ணைகள் எதிர்­வரும் மே 30 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்ப்ட்ட பின்னர், நீதி­மன்றில் இருந்து வெளி­யேறும் போதே அவர் இதனை தெரி­வித்தார். இதன்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மத்­திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்­திரன் தொடர்பில் பிர­தமர் மட்­டு­மன்றி ஜனா­தி­ப­தியும் பொறுப்­புக்­கூற வேண்டும். ஜனா­தி­பதி அவரை சிங்­கப்பூர் பிரஜை. அது தனக்கு தெரி­யாது, மறுநாள் பத்­தி­ரி­கை­யூ­டா­கவே தெரிந்­து­கொண்டேன் என கூறி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஒருவர் தப்­பிக்க முடி­யாது.நேற்றும் (நேற்று முன்தினம்) அமைச்சர் ராஜித என்ன சொல்­கிறார். ராஜ­ப­க்ஷக்­களை சிறையில் அடைத்தால் எல்லாம் சரி­யா­கி­ விடும் என்­கிறார்.

 இன்று அர்ஜுன் மகேந்திரன் சுதந்­தி­ர­மாக உள்ளார். இதே பொது எதி­ர­ணியில் யாராக இருப்­பினும், சிவப்பு அறிவித்தல் பெற்று இந்நேரம் கைது செய்­யப்பட்­டி­ருப்போம். சி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. எல்லாம் பொது எதிர்க்­கட்­சியின் உறுப்­பி­னர்­களை மட்­டுமே  குறி வைக்கும்.

 இந்த பழி­வாங்கும் எண்ணம் வேண்டாம். அதனை ஒரு பக்கம் வைத்­து­ விட்டு, மக்­க­ளுக்கு உரத்தை கொடுங்கள். மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு செவி­சா­யுங்கள். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஐ.தே.க.வே நாசப்­ப­டுத்­தி­ய­தாக ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன கூறினார். எனினும் அப்­ப­டிப்­பட்ட ஐ.தே.க.வுடன் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்­கவே ஜனா­தி­பதி முயற்­சிக்­கின்றார். அத­னா­லேயே அவர் இர­வு­களில் இர­க­சி­ய­மாக அவர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்­தையில் ஈடுபடுகின்றார்.  இந் நிலையில் ஸ்திரமான அரசாங்கம், பிரதமரை கூட தீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில் பொது மக்களை அசெளகரியத்துக்கு உட்படுத்தாது உடன் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என நாம் கோருகின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.