Header Ads



4 மணிவரை மைத்திரி, ரணில் பற்றி எதனையும் வெளியிடக்கூடாது - ஊடகங்களுக்குத் தடை

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளியிடும் எந்த அறிக்கைகளையும் வெளியிடக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி அல்லது பிரதமர் தேசிய பாதுகாப்பு தொடர்பானதோ அல்லது திடீர் அவசர நிலை தொடர்பாகவோ, அல்லது வேறு எந்த அறிக்கையை வெளியிட்டாலும், அதனை  பிரசுரிக்கவோ,  ஒலி,  ஒளிபரப்பவோ  கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாலை 4 மணியளவில் வாக்களிப்பு முடியும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.