Header Ads



தனி ஆட்சிக்கு UNP தயார் - 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

125 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை எந்தவொரு நேரத்திலும் கைப்பற்ற முடியும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் பற்றி எவ்வித ஞானமும் இல்லாதவர்கள் அரசாங்கத்தை கவிழ்ப்பது பற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், எந்தவொரு நேரத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் 125 பேரின் ஆதரவுடன் ஆட்சியை நிறுவ முடியும் எனவும் கூறியுள்ளார்.

நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு சவால்களையும் எதிர்நோக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆட்சி அமைப்பது தொடர்பில் ஏற்கனவே கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், மக்களின் பெரும்பான்மை ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு காணப்படுகின்றது என்றும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Muslim Parties and MPs are already been taken for granted. No doubt they will always be with the ruling party. Their negotiations are always about number of Ministry posts only, not about the welfare of the Community.

    ReplyDelete

Powered by Blogger.