வெற்றி உறுதி, ஆட்சியமைப்பதும் உறுதி - SLFP
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது தேர் தல் பிரசார கூட்டத்தை எதிர்வரும் 10ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் அமைப்பாளரும் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பு அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஆரம்ப பிரசார கூட்டத்தை எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை மாலை 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடத்தவிருக்கின்றோம். கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் வழிநடத்தலில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளது.
அத்துடன் மறுநாள் 11ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் பிரசாரக்கூட்டம் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து நாடுபூராகவும் இடம்பெறவுள்ள பிரசார கூட்டங்களில் பிரதான கூட்டங்களில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் நாடுபூராகவும் பிரதேச மட்டங்களில் தேர்தல் வழிநடத்தல் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் வழி நடத்தும் வகையிலும் தேர்தல் தொடர்பான உபதேசங்களை வழங்குவதற்கும் கட்சியின் தலைமையகத்தில் பிரதான வழிநடத்தல் காரியாலயம் இன்று (நேற்று) திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தலைமையகத்தில் இருந்தே மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக செயற்படும் பங்காளிக்கட்சிகள் அனைத்தும் இந்த தேர்தலில் எம்முடன் இணைந்து போட்டியிடுகின்றன. குறிப்பாக தினேஷ் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியில் இருந்து எப்போதும் இரண்டுபேர் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு தெரிவாகின்றனர். அவர்களில் தினேஷ் குணவர்த்தனவைத் தவிர ஏனைய அனைவரும் எம்முடன் இணைந்துள்ளனர். அதேபோன்று விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எங்களுடன் இருக்கின்றனர். அவர் மாத்திரமே எதிரணியில் இருக்கின்றார்.
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முற்றாக எங்களுடன் இணைந்து போட்டியிடுகின்றது. நுவரெலியாவில் ஒரு பிரதேச சபையில் மாத்திரம் அவர்களின் சேவல் சின்னத்தில் எங்களது உறுப்பினர்கள் இணைந்து போட்டியிடுகின்றனர். அதேபோன்று முஸ்லிம் கட்சிகளான அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களின் கட்சிகள் எங்களுடனே இருக்கின்றன. அதனால் எதிர்வரும் தேர்தலில் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றி ஆட்சியமைப்பது உறுதியாகும் என்றார்.
உறுதியோ உறுதி சிறீலங்கா சுதந்திர கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது. மற்ற அத்தனை கட்சிகளும் படுதோல்வி.
ReplyDeleteஎன்ன செய்வது அவரது கட்சியின் உறுப்பினர் என விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இவர் இருக்கிறார்... ஹிஸ்புள்ளா அவரது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என்பது அவருக்கு தெரியவில்லை... அமைப்பாளருக்கு தெரியப்படுத்தவும்
ReplyDelete