Header Ads



பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுவது பற்றி பிரதமருக்கு அறிவிப்பு

நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவது தொடர்பில் அவதானம் செலுத்தி இருப்பதாக, சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அவசர நாடாளுமன்ற அமர்வொன்றை நடத்துமாறு, மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டும் அதிகாரம் பிரதமரிடம் பகிரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பில் தாம் பிரதமருக்கு தெரியப்படுத்தி இருப்பதாக, சபாநாயகரின் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பொருளாதார நிலைமைகள் மற்றும் தற்கால பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தகூட்டத்தை நடத்துமாறு தினேஷ்குணவர்தன கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.