கதிர்காமத்தில் பதற்றம்
கதிர்காமத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞனை இலக்குவைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்விளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தான்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியோரை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்க்குண்டுப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
Post a Comment