Header Ads



வெடி குண்டு மீட்பு - யாழ்ப்பாண பொலிசார் விசாரணை

யாழ்ப்பாணம் மண்டைத்தீவு கடற்கரைக்கு அருகில் உள்ள கால்வாய் ஒன்றுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோ கிராம் எடை கொண்ட வெடி குண்டை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

இந்த குண்டு விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவரது கண்ணிலும் படாமல் இந்த குண்டு அங்கு இருந்திருக்க வாய்பில்லை எனவும் இதனால், சில தினங்களுக்கு முன்னர் எவராவது இந்த குண்டை கொண்டு வந்து வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேசத்தை மீனவர், வெடிக்குண்டு இருப்பதை கண்டு அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

வெடி குண்டு ஒரு பெட்டியில் வைத்து நன்றாக பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் குண்டை பயன்படுத்தக் கூடிய நன்கு அனுபவம் கொண்டவர் இந்த வெடி குண்டை கொண்டு வந்து வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற யாழ் பொலிஸார் வெடி குண்டை எடுத்துச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.