பெண்ணை ஆணாக கருதியதால், பொதுஜன முன்னணிக்கு ஏற்பட்ட பரிதாபம்
பொது ஜன முன்னணி உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. மஹரகம நகர சபை தேர்தலை இரத்து செய்யுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மஹரகம நகர சபைக்கான பொது ஜன முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன் முறையீட்டு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நகர சபைக்கான வேட்பு மனு தாக்கலின் போது பெண் பிரதிநிதித்துவ பட்டியலில் ஆணா பெண்ணா என கேட்கப்பட்டிருந்த இடத்தில் ஆண் என அடையாளமிடப்பட்டிருந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிராகரிப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளதோடு குறித்த மனுவிற்கான தீர்மானம் கிடைக்கும் வரை மஹரகம நகர சபைக்கான தேர்தலை இடைநிறுத்தி வைக்குமாறு இன்றைய தினம் -22- உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எப்படிப்பட்ட புத்திசாலிகள் பாருங்கோ பிழையையும் விட்டுவிட்டு வழக்கு வேறு வைத்திருக்கினம்
ReplyDelete