அசாத் சாலியை சுதந்திரக்கட்சி, இறக்குமதி செய்யவில்லை - நிமல் சிறிபால
சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு பொறுப்பான கட்சியின் அமைப்பாளர்கள் இருவருக்கு இடையில் ஒற்றுமையில்லாத காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் சட்டங்களை சரியான முறையில் அமுல்படுத்துமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். தேர்தலில் வெற்றி பெற அரசாங்கத்தின் அதிகாரங்கள் தேவையில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேயர் வேட்பாளராக அசாத் சாலியை இறக்குமதி செய்யவில்லை.
இம்முறை தேர்தல் இனவாதத்தை ஒழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment