இலங்கை முஸ்லிம்களின், பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய அறிக்கை கையளிப்பு
இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலான அறிக்கையை தேசிய ஷுரா சபையும் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமும் மாகாண சபை எல்லை நிர்ணய சபையிடம் கொழும்பில் கையளித்தது.
நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரதான அறிக்கையுடன் கொழும்பு மாவட்டத்துக்கான தோ்தல் தொகுதி நிர்ணயம் பற்றிய அறிக்கையும் வேறாக கையளிக்கப்பட்டது.
ஏனைய மாவட்டங்களின் அறிக்கைகள் அந்த அந்த மாவட்டப் பிரதிநிகள் ஊடாகக் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை ஒன்று திரட்டிய தொகுப்பாகவே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment