உள்ளூராட்சி தேர்தலுக்கு 400 கோடி செலவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அதிக உறுப்பினர்கள் தெரிவாவது கொழும்பு மாநகர சபைக்கே என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அத்துடன் மிகக்குறைவான உறுப்பினர்கள் தெரிவாவது அக்கறைப்பற்று பிரதேசசபையில் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று(4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய கொழும்பு நகரசபைக்கு 113 உறுப்பினர்களும், அக்கறைப்பற்று பிரதேசசபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதிக்கிடையில் நடைபெறும் என்றும்,இதற்கு 400 கோடி ரூபா செலவு ஏற்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
no problem. we will pay.
ReplyDelete