31 ஆம் திகதி முடிவு, செய்கிறது சுதந்திரக் கட்சி
ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா- இல்லையா என்று முடிவு செய்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 31ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலம், குறித்தும், அதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கம் வகிப்பதா இல்லையா என்பது குறித்தும், இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment