எதிர்ப்பை தீவிரப்படுத்துகிறார் கோத்தபாய
புதிய அரசியலமைப்புக்கு எதிரான பிரசாரங்களை எளிய அமைப்பின் ஊடாக விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கேகாலையிலும், 26ஆம் திகதி அநுராதபுரத்திலும், டிசம்பர் 3ஆம் திகதி காலியிலும் பாரிய கூட்டங்களை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை தேசிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டு அது குறித்த விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குறித்த புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் மற்றும் வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கை, உபகுழுக்களின் அறிக்கைகள் ஆகியவை நாட் டுக்கு பாரிய ஆபத்து என்றும் குற்றம் சாட்டியுள்ள எளிய அமைப்பு அது தொடர்பில் பெரும்பான்மை மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை பிரதானப்படுத்தி முதலாவதாக பிலியந்தலையிலும், இரண்டாவதாக கண்டியிலும் இரு பாரிய கூட்டங்களை இந்த அமைப்பு நடத்தியிருந்தது.
இந்நிலையிலேயே இப்பிரசார நடவடிக்கையை மேலும் வலுவாக்கி ஏனைய மாவட்டங்கள் தோறும் முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல்கள் நெருங்குவதனால் மக்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பை மையப்படுத்திய கருத்துக்களை பிரதானப்படுத்தி வாக்குகளை சேகரிக்கும் செயற்பாடுகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்னெடுக்கும் என்பதால் இடைக்கால அறிக்கை தொடர்பான மாற்றுக்கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்குமான வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது நிகழ்ச்சி நிரலிடப்பட்டுள்ள கேகாலை, அநுராதபுரம், காலி ஆகிய மூன்று கூட்டங்களும் வழமைபோன்று முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாயவின் பிரசன்னத்துடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வியத்மய எனப்படும் தொழில் வாண்மையாளர்களின் அமைப் பும் மாவட்ட ரீதியாக தொழில் வாண்மை யாளர்களை ஒருங்கிணைத்து பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள் வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இந்த கூட்டங்கள் இனத் தவேசத்தை முன்வைத்து நடத்தப்பட உள்ளன. எனவே மக்கள் நிதானமாகவும் அமைதியுடனும் அவற்றில் கலந்து கொள்ளாது தவிர்ப்பது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும்.
ReplyDeleteMuslims should not suppprt or participate any of their agenda.
ReplyDelete