மூதூர் பெரியபள்ளிவாசல் வக்ப், சொத்தை பாதுகாக்க உதவுவோம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
மூதூர் பெரிய பள்ளிவாசலுக்கு அல்லாஹ்வின் திருப்தியை நாடி எமது முன்னோர்கள் பல வகையான ஸதக்கத்துல் ஜாரியாக்களை செய்திருக்கின்றனர் குறிப்பாக அதில் கடைகளும், வயல் காணிகளும் உள்ளடங்குகின்றன.
இவைகள் மிக நீண்ட காலமாக எல்லைப்படுத்தப்படாமலே இருக்கின்றது இதனால் இக்காணிகளின் எல்லைகள் இப்போதைய நிலையில் பல மாற்றங்களுடன் காணப்படுவதனாலும், இவைகள் மூலம் எந்தவித வருமானங்களும் இல்லாமல் இருப்பதினாலும் அவசரமாக இக்காணிகளை எல்லைப்படுத்தி வருமானம் தரக்கூடிய வழிவகைகளை செய்யவேண்டியிருக்கிறது.
எனவே எம்மால் முடிந்த உதவிகளை செய்து அல்லாஹ்வின் அருளினைப் பெற்றுக்கொள்வோம்.
குறிப்பு:- உதவி செய்ய விரும்புபவர்கள் பள்ளிவாசல் நிருவாக சபையை சந்தித்து உங்களது உதவிகளை வழங்க முடியும்.
Post a Comment