வட மாகாண சபைக்கு எதிராக, போராட தயங்கமாட்டோம் - வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு
வடக்கு முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 27 வருடங்கள் கடந்தும் வடக்கு முஸ்லிம்களின் தாயகத்துக்கான மீள்குடியேற்றம் மந்தகதியிலேயே உள்ளது. என வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் யாழவன் நஸீர் நேற்று தில்லையடி, றத்மல்யாயவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்:
மத்திய அரசோ, வடக்கு மாகாண அரசோ இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் போதிய கரிசனை காட்டுவதாக தெரியவில்லை.
மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், சில நிபந்தனைகள் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை இல்லாமல் செய்கின்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற செயலனியாவது இவ்வாறான பிர்சினைகளை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
கடந்த மாதம் 30ம் திகதி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கும், எமக்கும் இடையில் ஒரு சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடபுல முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டது ஒரு துன்பியல் நிகழ்வு எனவும் யாழ்முஸ்லிம்கள் மீளக்குடியேர தன்னாலான முயற்சியில் உதவுவேன் என அவர்குறிப்பிட்டதாக, இவ் அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
எனினும் வடக்கு மாகாண சபை ஒரு சமூகத்திற்கு உரிய ஒன்றல்ல, வடக்கில் வழும் அனைத்து சமுதாயத்துக்கும் உரியதாகும்.
வடக்கு மாகாண சபையானது
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு காத்திரமான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு ஒரு துண்டு காணியை வழங்குவதற்கு இம்மாகாண சபைக்கு விருப்பம் இல்லை என்பதையே நாம் உணர்கின்றோம்.
இம்மாத இறுதிக்குள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம், இதற்கு உதவுவதாக சிவாஜிலிங்கம் அவர்கள் எம்மிடம் கூறியுள்ளார்.
எது எவ்வாறெனினும் எமது சுமூகமான பேச்சுவார்த்தை போக்குக்கு, சுமூகமான தீர்வு கிடைக்காவிடின்
20,000 மக்களை ஒன்று திரட்டி வடக்கு மாகாண சபைக்கு எதிராக போராடவும் நாம் தயங்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்
மெளலவி சல்பிக்கான், அஸ்வர்கான், ஜெஸ்லி, ஜபருல்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்
(கரீம் எ.மிஸ்காத்)
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
ReplyDelete(அல்குர்ஆன் : 22:78)
www.tamililquran.com
தமிழ் சமூகத்தலைமைகளை பொறுத்தவரை வடக்கு முஸ்லிம்களின் நிலைமை பற்றிக்கூறும்போது அது ஒரு "துன்பியல்" சம்பவம் என்றே கூறுகிறார்களே தவிர அந்த துன்பியலுக்கு பரிகாரம் காண யாரும் முன் வருவதாக இல்லை .இது ஒரு தெளிவான இனப்பாகுபாடு .
ReplyDelete