Header Ads



உயிருக்காக போராடும், இந்த தாய்க்கு உதவுவீர்களா..?

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பெரிய பள்ளிவீதியை வசிப்பிடமாகக் கொண்ட ஜே.பத்திலா உம்மா இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு ஒரு வருட காலமாக வைத்தியசாலையிலூம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.அன்றாடம் உழைத்து வாழும் இந்தத் தாயின் ஒரு அன்பு மிக்க வேண்டுகோள் உங்கள் யாவருக்கும் உதவி புரியும் என்ற நோக்கிலேயே இப்பதிவு இடம்பெறுகிறதாகவும் தாயின் உதவுக் கரங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. 

மூன்று பிள்ளைகளின் தாயான ஜே.பத்திலா உம்மா வயது 48 இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது இதனை சீர் செய்வதாக இருந்தால் சுமார் 25 இலட்சம் பணம் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த பணத் தொகையை தம்மால் ஈடு செய்யமுடியாதுள்ளதாகவும் அவர்களது குடும்பம் தெரிவிக்கின்றன.நல் உள்ளம் படைத்த எம் சகோதர சகோதரிகள் தனக்கான பண உதவியினை தங்களால் இயன்றளவு உதவுமாறு ஒரு தாயாக உங்களிடம் உதவி கோருகிறார்.

"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாறோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

இந்த தாயின் சிறு நீரக நோயினை குணப்படுத்த தங்களது துஆவிலும் சேர்த்துக் கொள்ளுமாறும்.உதவிகளை வழங்குவோர் பின்வரும் கணக்கு இலக்கத்துக்கு வைப்பிலிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்.உயிருக்காக போராடும் தாய்க்காக உதவ முன்வாருங்கள் இறைவன் தங்களது சொத்து செவங்களையும் உடல் நலத்தையும் மேலும் ஆரோக்கியமானதாகவும் ஆக்குவானாக 
ஆமீன்..

J.Fathila Ummah
A/C: 094200100034510
Peoples Bank(மக்கள் வங்கி)
கிண்ணியா

தொலைபேசி இல:0757195551



No comments

Powered by Blogger.