சாய்ந்தமருதில் பூரண ஹர்த்தால்
தனியான உள்ளூராட்சிமன்ற கோரிக்கையை முன்வைத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சாய்ந்தமருதில் இன்றுமுதல் தொடராக மூன்று தினங்களுக்கு பூரண ஹர்த்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் இணைந்து நேற்றுமுன்தினம் இரவு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் நடத்திய கூட்டத்தின்போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையானது, அனைத்துக் கட்சிகளின் தலைமைகளாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையில், அதனை வெற்றிகொள்ளுமுகமாக அரசுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வண்ணம் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் அதன் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
* திங்கட்கிழமை (இன்று 30) முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு கடையடைப்பு
* வயது வந்த அனைவரும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்று, விஷேட துஆ பிரார்த்தனையில் ஈடுபடுவது
* உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பள்ளிவாசல் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் பொதுக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கமானது எதிர்வரும் திங்கட்கிழமை (30) முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற அதன் விஷேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
I am not against getting a separate PS for the town of Sainthamaruthu. Observation of Harthal is not a means to win the demand. It only affects the civilian life badly and the Islamic theologians should resort to spiritual way like fasting and dua. Also I am personally against to Muslim politicians because their only expectation is to become powerful and enjoy the perks. It is history.
ReplyDelete