"மஹிந்தவுனும் முஸ்லிம் சமூகம், பேச வேண்டும்"
பொதுபலசேனாவுடன் பேசித்தான் பிரச்சினையை தீர்க்கலாம் என ஆசாத் சாலி போன்றோர் இப்போது ஞானம் வந்து சொல்கின்றனர். இதனை உலமா கட்சி 2015ம் ஆண்டு சொன்ன போது பொதுபல சேனா உருவாகும் முன் உலமா கட்சியால் கொழும்பில் புலிகளுக்கெதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்ட ஞானசார, உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவியுடன் நிற்கும் போட்டோவை சமூக வலையத்தளங்களில் நக்கலடித்தனர்.
இப்போது முஸ்லிம்களுக்கெதிரான பல விடயங்கள் அரச உதவியுடன் நடை பெற்ற பின் பொதுபல சேனாவுடன் பேசி பிரச்சினையை தீர்க்க முடியும் என்கிறார்கள்.
பொது பல சேனாவை உருவாக்கியது மஹிந்த ராஜபக்ஷவே என்பது ஆஸாத் சாலி உட்பட முஸ்லிம்களின் கருத்தாகும். அது உண்மையாயின் மஹிந்தவை விட்டு விட்டு பொது பல சேனாவுடன் பேசுவதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாதே. பொதுபல சேனாவை உருவாக்கியவர், போஷித்தவர் மஹிந்த என்பது உண்மையானால் மஹிந்தவுடன்தான் முஸ்லிம் சமூகம் பேச வேண்டும். மஹிந்தவுடன் பேசத்தேவையில்லை, பொது பல சேனாவுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்கலாம் என்றால் பொதுபல சேனாவை உருவாக்கியது, வளர்த்தது மஹிந்தவோ கோட்டாவோ இல்லை என்பதை ஆஸாத் சாலியும், ஜம்மிய்யதுல் உலமாவும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று அர்த்தம்.
ஆகவே பொது பல சேனாவுடன் முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்தோர் பேசி எந்த தீர்வும் பெற முடியாது. பொது பல சேனாவுடன் சரிசமமாக உட்கார்ந்து பேசும் தகுதி உலமாக்களுக்கு மட்டுமே உண்டு. ஆகவே உலமாக்களும் உலமா கட்சியும் இணைந்து பேசுவதன் மூலமே வெளிப்படைத்தன்மையை பேண முடியும். இல்லாவிடில் ஆஸாத் சாலி போன்றோரால் மீண்டும் முஸ்லிம் சமூகம் காட்டிக்கொடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.
அத்துடன் பொது பல சேனாவுடன் பேசுவதற்கு முன்பாக மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முஸ்லிம் சமூகம் முன் வரவேண்டும் என்றும் அல்லது பொதுபலசேனாவுக்கும் மஹிந்தவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற உண்மையை ஆஸாத் சாலியும் உலமா சபையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
சிவப்புத்தொப்பி உலமா அவர்களே!
ReplyDeleteநீங்க பெரீ.....ய தீர்க்கதரிசி மட்டுமல்ல நல்லா logic க்கும் படீ.....ச்சிரிக்கயள்.
ஒண்டு செய்ங்க. அதாவது...law செய்ங்க. அப்புறமா அரசியலில் மிகவேகமாக லோலோலோ....எண்டு அலையுங்க. முஸ்லிம்களின் அடுத்த டீலர் sorry ரீலர் நீங்கதான்.
மௌலவி இப்ப ஒங்க பிரச்சினை என்ன அசாத் சாலி பொது பல சேனாவுடன் பேசுவதா?, இல்ல ஒங்களையும் இதில் சேர்த்துக்கொள்ள வில்லை என்ற ஆதங்கமா? இல்ல நான் நல்ல மஹிந்தவாதி என்பதை சொல்ல வருகிறீர்களா?
ReplyDeleteஎது எப்படியோ, யார் யாருடன் பேசியோ இந்த பொது பல சேனாவை அடக்கி வைக்க முடியுமானால் அதுவே இலங்கை முஸ்லிம்களுக்கு நடக்கும் பெரும் புண்ணியம்.
நீங்கள் ஒரு மௌலவியாக இருந்து கொண்டு இப்படி பொறாமை கொண்டு கருத்துக்களை வெளியிடுவது எமது சமுதாயத்துக்கு சீர்கேடுகளையே கொண்டு வருமே ஒழிய நல்லது ஒன்றும் நடக்கப்போவதில்லை.
தயவு செய்து பொது பல சேனா மஹிந்தவினால் உருவாக்கபட்டது அல்லது மஹிந்தவினால் உருவாக்கபட்ட வில்லை என்பதெல்லாம் இப்போதைக்கு தேவையில்லாத கத. முடியுமானால் இவர்களுடன் சேர்ந்து பொது பல சேனாவுடன் பேசுங்கள் அல்லது இந்த விடயத்தில் தலையிடாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.