முஸ்லிம் தனவந்தர்களின் முன்மாதிரி, கிண்ணியாவில் எழைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி
கிண்ணியாவில் பின் தங்கிய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்த சுமார் 10 குடும்பங்களுக்கான வீடுகளை கொழும்பு தனவந்தர்கள் நண்பர்களாக குழுவாக இணைந்து வீடுகளை நேற்று(21) உரிய குடும்பத்தாருக்கு கையளித்தனர்.
நிறுவன அமைப்போ எதுவுமே இல்லாமல் தங்களது சொந்த நிதியில் வீடு இல்லாமலும் குடிசைகளிலும் வாழ்ந்து வந்த குடும்பத்தை நேரடியாக கண்டு கொண்டதும் இவ்வாறான வீட்டு உதவிகளை வழங்க முன்வந்த பெயர் குறிப்பிட விரும்பாத புகைப்படத்தை பிரசுரிக்க விரும்பாத தனவந்தர்களுக்கு நன்றிகளை மக்கள் தெரிவிக்கின்றனர்.
வலது கையால் கொடுப்பது இடது கை க்கு தெரியக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் அருள்பாலிப்பானாக.இவ்வாறான மேலும் பல உதவிகளை வழங்க இவர்களுக்கு இறைவன் பூரண ஆரோக்கியோத்தையும் சுகத்தையும் தங்களது தொழில்களிலும் பரக்கத் செய்வானாக ஆமீன்.
Sltj செஞ்சி இருந்தால் அடிக்கல் இருந்து முகடு வரை
ReplyDeleteAlHamdulillah May Allah Almighty bless you all for this exemplary job done.
ReplyDeletewhy they did not finish the plastering work?
ReplyDelete