கப்பல் விபத்தில் சிக்கிய இந்தியர்களை, மீட்ட இலங்கை கடற்படை
மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பல் திடீரென நடுக்கடலில் வைத்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியிருந்த 7 இந்தியப் பணியாளர்களை இலங்கை கடற்படையினர் இன்று (21) அதிகாலை மீட்டுள்ளனர்.
குறித்த கப்பல் காலியிலிருந்து சுமார் 65 கடல் மைல்கள் தொலைவில் விபத்தில் சிக்கியிருந்தாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
Post a Comment