ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவே, முன்கூட்டி தேர்தலை நடத்தினேன் - மஹிந்த
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லையென்றும் அதை ஒழிக்கும் முகமாகவே தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரு வருடங்கள் மீதியாக இருந்த நிலையில், முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமும் மக்களின் ஆணையும் இருந்த போதிலும், நீதியான சமுதாயத்துக்கான தேசிய இயக்கம் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஆட்சி முறையை ஏன் ஒழிக்கவில்லை என்று மஹிந்த ராஜபக் ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இரண்டரை வருடங்களுக்கும் அதிகமான காலமாக பதவியில் இருக்கின்ற போதிலும் கூட, அந்த ஆட்சி முறையை ஒழிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
மற்ற அனைவரும் பொய்யையும் புரட்டையும் மக்கள் மத்தியில் பரப்பும் போது இந்த மாபெரும் தலைவர் மாத்திரம் உண்மையையும் சத்தியத்தையும் மக்களுக்கு எத்திவைக்கின்றார். இந்த சமூகத்துக்குப் புரியுமா என்ன?
ReplyDeleteI wish the Executive Presidency should remain...because if the executive power delegated to Legislature, it would be like handing over the control from one person (either good or bad person) to majority of MP's who jump sides for their own benefits.
ReplyDeleteஇவ்வருட sorry இந்நூற்றாண்டின் பிரபலமான joke இதுவாகத்தான் இருக்கும். இதனை மகிந்தவின் இந்த photo வே உறுதிசெய்கிறது.
ReplyDeleteஇவருக்கு புத்தி சுவாதீனம் அல்லது இலங்கை மக்கள் அனைவரும் முட்டால்கள் என்று நினைக்கிறார் போலும். இவர் தான் 18 வது திருத்தச்சட்டம் மூலம் வாழ் நாள் முழுக்க ஜனாதிபதியாக இருக்க முயற்சி செய்தவர் தற்போது இவ்வாறு சொல்கிறார்
ReplyDeleteநிரைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிந்ததோ இல்லையோ நீங்க ஒழிந்தீங்க.
ReplyDeleteஎங்கட ஜோக்கர் மாமா
ReplyDelete