அமெரிக்காவின் 6 போர்க் கப்பல்கள், இலங்கை வருகின்றன
அமெரிக்காவின் ஆறு அதிநவீன நாசகாரி போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளன. விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஒன்றுடன் இணைந்தே இந்த போர்க்கப்பல்கள் இலங்கையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளன.
சீனா, இந்தியா, பாகிஸ்தான், தென்கொரிய போர்க்கப்பல்களும் இலங்கை வரவுள்ளன. இலங்கை அரசாங்கம் ஏனைய சர்வதேச நாடுகளுடன் தொடர்ச்சியாக பாதுகாப்பு நட்புறவினை பலப்படுத்தி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு கூட்டுப் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஆறு போர்க்கப்பல்கள் இந்த மாத இறுதியில் இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. இம்மாதம் 28 ஆம் திகதியில் இருந்து 31 ஆம் திகதிக்குள் இலங்கையில் கொழும்பு துறைமுகத்தை இவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களுடன் இணைந்தே ஏனைய கப்பல்களும் இலங்கை நோக்கிய பயணத்தினை ஆரம்பித்துள்ளன. அதேபோல் ஒரு வார காலம் இந்த கப்பல்கள் இலங்கையில் தரித்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் இரண்டு போர்க்கப்பல்கள், சீனாவின் ஒரு போர்க்கப்பல் மற்றும் பாகிஸ்தானிய போர்க்கப்பல் ஒன்றும், தென்கொரியாவின் பிரதான இரண்டு போர்க்கப்பல்களும் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தினுள் இலங்கைக்கு வரவுள்ளது.
வெவ்வேறு தினங்களில் வருகைதரவுள்ள நிலையில் இந்த போர்க்கப்பல்களுடனும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுக்க வுள்ளனர்.
அமெரிக்க நலன்களுக்காக cia என்னென்னமோ வித்தைகளை காட்டிவருகிறது. இலங்கை அரசும் இச்சதி வலையில் படிப்படியாக பின்னப்பட்டு வருவதாகவே உள்ளது.
ReplyDeleteதன்னலனுக்கு மாற்றமாக சிறுகீறல் விழுந்தாலும் அதனைப்பொறுத்துக்கொள்ளாது பல்டியடிக்கும் என்பதற்கு பாகிஸ்தான் நல்ல உதாரணமாகும்.
எனவே இவனுக்கு வாலையும் அவனுக்கு தலையையும் காட்டித்தான் ஆட்சியை நகர்த்த வேண்டும். இல்லாவிடில் நாட்டைத்துண்டாக்கி கபளிகரம் செய்துவிடுவான் ட்ரம்ப்.