Header Ads



நுவரெலியாவில் புதிய பிரதேச 4 சபைகள் - அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம்

அம்பகமுவை, மஸ்கெலியா, நோர்வுட், நுவரோலியா, அக்கரபத்தனை, கொட்டகலை ஆகிய பிரதேச சபைகள் அமைக்கப்படுவதை இன்று -31- அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்து. 

உள்ளாட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த பத்திரம் சமர்பிக்கப்பட்ட போது அமைச்சரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணி  தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம்  ஆகியோர் உடனிருந்து ஆதரித்தனர்.  

இதுபற்றி கருத்து கூறிய கூட்டணி தலைவர் மனோ கணேசன், 

"தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு பயணத்தில் ஒரு மைல்கல்லாக, சற்றுமுன் நுவரெலிய மாவட்ட  புதிய பிரதேச சபைகளை அமைச்சரவை அங்கீகரித்தது" என்றார். 

மேலும், "முதற்கட்டமாக இந்த சாதனை அமைந்துள்ளது. இதை நாம் எம் காத்திரமான நடவடிக்கை மூலம் பெரும் ஆர்ப்பாட்டமில்லாமல் பெற்றுள்ளோம்.  இன்னமும் எம் ஆளுமை பயணம் தொடரும்." என்றார்.

No comments

Powered by Blogger.