Header Ads



ரோஹிங்கியர்கள் பயணித்த, படகு கவிழ்ந்து 15 பேர் மரணம்

பங்காளதேஸில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 15 ரோஹிங்கியாகள் பலியானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் இருந்து பங்களாதேஸ் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் சுமார் 100 பேர் வரையில் பயணித்துள்ளனர்.

அவர்களுள் குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பங்களாதேஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

மியன்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், மியன்மார் இராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்காளதேஸிற்கு தப்பிச் செல்கின்றனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட படகு கவிழ்ந்ததில் 15 ரோஹிங்கியா ஏதிலிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.