Header Ads



எவரையும் கைவைக்க விடமாட்டேன் - மைத்திரி

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவையும்,  விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட படையினரையும், தமது அரசாங்கம் பாதுகாக்கும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் இன்று இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஜெனரல் ஜெயசூரிய விவகாரம் ஒரு உள்ளக விவகாரம் அல்ல. ஜெனரல் ஜெயசூரிய மீதோ, பேரில் பங்கெடுத்த படையினர் மீதோ எவரையும்  கைவைக்க விடமாட்டேன்.

அரசசார்பற்ற நிறுவனங்களின் தாளத்துக்கு நான் ஆடமாட்டேன். சில நல்ல அரச சார்பற்ற நிறுவனங்களும் இருக்கின்றன. வேலை செய்யாத அமைப்புகளும் இருக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.