அல்லாஹ்வின் கோபத்தைத் தணிக்கும், இரகசிய சதகா...
அறிஞர் அலி பின் ஹுஸைன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரவு நேரங்களில் அதிகமான ரொட்டிகளை சுட்டு அதனை தனது தோளிலே சுமந்து கொண்டு சென்று யாருக்கும் தெரியாத வகையில் ஏழைகளுக்கு தர்மம் செய்வார்கள் இது பற்றி அவர்கள் கூறுகையில் "இரகசியமாக தர்மம் செய்வது அல்லாஹ்வின் கோபத்தைத் தடுத்துவிடும்" என நபிகளார் கூறியுள்ளதாக கூறுவார்கள். என்பதாக அபூ ஹம்ஸா அஸ்ஸுமாலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேலுள்ள சம்பவத்தில் வரும் ஹதீஸை அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸில்ஸிலா ஸஹீஹா 1908 வில் பதிவு செய்துள்ளார்கள்.
நூல் - ஸிபதுஸ் ஸப்வா - 2/96
இப்னுல் ஜௌஸி ரஹிமஹுல்லாஹ்.
By - Shk TM Mufaris Rashadi.
Post a Comment