Header Ads



மேயர் வேட்பாளராக ரோசி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது கொழும்பு மாநகரசபைக்காக தாம் போட்டியிட உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு நகரை தூய்மையான குப்பைகளற்ற நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொழும்பு நகர எல்லைக்குள் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக புதிய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளில் ஒன்றான கொழும்பு நகரை அபிவிருத்தி செய்ய கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.