முஸ்லிம்களின் வேலியை பிடுங்கி சுமணரத்ன குழப்பம், நீதிமன்ற உத்தரவையும் கிழித்து வீசினார்
வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியாலயத்தில், மிக நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த வந்த மைதானக் காணியை மீட்பதற்கு, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமணரத்னதேரர் தலைமையில், இன்று (15) பகல் அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், காணி வேலியைப் பிடுங்க முற்படமையை அடுத்து அங்கு பெரும் பதற்ற நிலையேற்பட்டது.
இதன்போது, அப்பகுதிக்கு வந்த பொதுமக்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
அதனையும் பொறுப்படுத்தாக பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்படும் போது, பொலிஸ் பாதுகாப்பு படையினரால், அம்பிடியே சுமணரத்னதேரர் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டனர்.
தாக்குதலுக்கு இலக்கான பொதுமக்கள் ஆவேசகம் கொண்டு வேலியை பிடுங்கிய போது, பொலிஸார், குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டதில், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த மைதானக் காணி முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலையில் அங்கு முஸ்லிம்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment